> மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் மகிந்த

மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் மகிந்த

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளனக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் இருந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு வருகைத் தந்துள்ளனர்.